வாசிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிதானத்தை இழந்து நிருபரை திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.