×

இந்தியாவில் 4 கோடியை நோக்கி கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 614 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.90 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.97 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,55,874 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,97,99,202 ஆக உயர்ந்தது.

* புதிதாக 614 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,90,462ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,67,753 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,70,71,898 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,36,842 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.15% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.23% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.62% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,62,92,09,308  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 62,29,956 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,India ,Union Health Department , கொரோனா,இந்தியா,பாதிப்பு
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...