ஜெனீவா : உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நேற்று நடைபெற்றது. அதில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் பேசியதாவது,கொரோனா பெருந்தொற்று 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. உலகம் இக்கட்டான தருணத்தில் உள்ளது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனாவின் கடுமையான கட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளன.