செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில், தமிழ்நாடு அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு வார துவக்க விழா நேற்று நடந்தது. இதில் 24மணி நேர மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம், பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தார்பாய்கள், இருச்சகர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம், இரவு நேரங்களில் வாகனங்கள் முன்னால் செல்வதை காட்டும் ஒளிரும் பட்டைகள் உள்பட வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் உபகரணங்களை மணல் லாரி உரிமையாளர்களின் சங்க மாநில தலைவர் யுவராஜ் கொண்டு வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.