காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் வேதகிரி (39). காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க நேற்று வந்தார். அங்கு, கொரோனா கட்டுப்பாடுகளால் மனுக்களை கூட்ட அரங்கில் உள்ள பெட்டியில் போடும் நடைமுறை உள்ளது. இதனை ஏற்க மறுத்த வேதகிரி, கலெக்டர் நேரடியாக வந்து தனது மனுவை பெற வேண்டும். எனக்கு பென்ஷனுடன் கூடிய வேலை வழங்க வேண்டும் என ரகளை செய்தார். இதை பார்த்ததும், அங்கு பணியில் இருந்த தாசில்தார் ஜெயசித்ரா தடுக்க முயற்சித்தார். ஆனால் அவர் கூச்சலிட்டு, தகராறு செய்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.