இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த விழாவில் நீதிபதி ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஹார்வர்டு பல்கலையில் பயின்று பட்டம் பெற்றவர்.