ஜெருசலேம்: இந்தியா, இஸ்ரேல் இடையேயான நட்புறவின் அடையாளமாக இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இந்தாண்டு இந்தியா வருகை தர இருப்பதாக அந்நாட்டிற்கான இந்திய தூதர் தெரிவித்தார். இந்தியா, இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டு நட்புறவை விளக்கும் விதமாக, சிறப்பு அடையாள லட்சினைக்கான போட்டி இரு நாடுகளிலும் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதில், இந்தியாவின் வாரணாசியை சேர்ந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர் நிகில் குமார் ராயின் வடிவமைப்பு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை ஜெருசலேம் தூதரகத்துக்கான இந்திய தூதரக அதிகாரி நாயோர் கிலான், டெல்அவிவ் இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் சிங்லா உடன் சேர்ந்து வெபினார் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தனர்.