சென்னை: சாஸ்த்ரா சத்சங்கத்தின் 2022ம் ஆண்டிற்கான சங்கீத வாசஸ்பதி விருதுகள் கடந்த 22ம் தேதி சென்னையில் வழங்கப்பட்டன. மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், ஆன்மிக சொற்பொழிவாளர் டாக்டர் சுதா சேஷையன், நாதஸ்வர சகோதரர்கள் காசிம் மற்றும் பாபு ஆகியோர் இவ்விருதுகளை பெற்றனர். ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. தற்போது டோக்கியோவில் வசித்து வரும் திருச்சியை சேர்ந்த டாக்டர் கே.இ.சீத்தாராம் விருதுகளை வழங்கி பேசினார். கர்நாடக இசை சொற்பொழிவு மற்றும் பாரம்பரிய கலை ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகளை வழங்கியதற்காக சாஸ்த்ரா சத்சங்கத்தை பெரிதும் பாராட்டினார்.