புதுக்கோட்டை: புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் நாகரத்தினம்(65). இவர் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வந்தார். மருத்துவமனை வளாகத்தில் ஓய்வறையில் தங்கி பணிக்கு சென்று வந்தார். கடந்த 20ம் தேதி காலை மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கு வந்த போது நாகரத்தினம் தலையில் பலத்த காயங்களுடன் தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மருத்துவமனை வளாகத்தை சுற்றி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். இதில் சந்தேகப்படும்படி 2 பேர் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.