டெல்லி: உலகின் பெரு நிறுவனங்களில் இந்தியர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருப்பது பெருமையாக உள்ளது என பிரதமர் மோடி பேசினார். இளைஞர்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது பெருமை அளிக்கிறது என கூறினார். பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதாளர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பெருமிதம் கொள்வதாக கூறினார்.