டெல்லி: நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் 2 வாரங்களுக்குள் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் கூறியுள்ளது. மேலும் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.