மும்பை: அதிகாரத்தை பிடிப்பதற்காக மட்டுமே பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவாவை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பாஜக உடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மும்பையில் உதய்பூர் மன்னரான மஹாரானா பிரதாப் சிங் சிலை திறப்பு விழா நடைபெற்றது. சிலையை திறந்து வைத்து பேசிய மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்ததன் மூலம் சிவசேனா கட்சி 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக தெரிவித்தார்.