இந்துத்துவாவை போலி முகமூடியாக அணிந்துள்ளார்கள்!: பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகள் வீணடித்துவிட்டதாக மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சனம்..!!

மும்பை: அதிகாரத்தை பிடிப்பதற்காக மட்டுமே பாரதிய  ஜனதா கட்சி இந்துத்துவாவை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பாஜக உடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மும்பையில் உதய்பூர் மன்னரான மஹாரானா பிரதாப் சிங் சிலை திறப்பு விழா நடைபெற்றது. சிலையை திறந்து வைத்து பேசிய மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பாரதிய  ஜனதா கட்சியை ஆதரித்ததன் மூலம் சிவசேனா கட்சி 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக தெரிவித்தார்.

பாரதிய  ஜனதா கட்சி அதிகாரத்துக்காக மட்டுமே இந்துத்துவாவை பயன்படுத்துவதாகவும்,  இந்துத்துவாவை பின்பற்றுவது போல அவர்கள் நடிப்பதாகவும் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார். பாஜக, இந்துத்துவா என்ற முகமூடியை போலியாக அணிந்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். உத்தவ் தாக்கரே பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, தங்களுக்கு இந்துத்துவா குறித்து சிவசேனா பாடம் நடத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: