சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை... நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை தட்டிச் சென்ற ஜெய்பீம் திரைப்படம்!!

லாஸ்ஏஞ்சல்: நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த படம், ஜெய்பீம். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கினார். பழங்குடியின பெண்ணின் சட்டப் போராட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம், ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே ஜெய்பீம் படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரும் நிலையில், தற்போது 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜெய்பீம் வென்ற நிலையில் சிறந்த நடிகராக சூர்யாவுக்கு சிறந்த நடிகையாக லிஜோமோல் ஜோஸ்-க்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இது படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இன்று நடைபெற்ற 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில், 50க்கும் மேற்பட்ட உலகநாடுகளின் திரைப்படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: