சென்னை : கொரோனா தொற்றின் 3வது அலை அடுத்த 2 வாரங்களில் உச்சம் அடையும் என்று சென்னை ஐஐடி கணித்துள்ளது. இந்தியாவில் டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்களின் பரவலால் 3வது அலை தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தினசரி தொற்று தற்போது நாள் ஒன்றுக்கு 3 லட்சம் என வீதத்தில் உள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா 3வது அலை எப்போது உச்சம் அடையும் என்பது பற்றி சென்னை ஐஐடி-யின் கணிதவியல் துறையும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலமாக கொரோனா பற்றி பகுப்பாய்வு செய்தனர். தற்போது ஆர் வேல்யூ எனப்படும் கொரோனா மொத்த பரவல் விகிதம் 1.57% ஆக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.