சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் இன்றி குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சென்னை வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விமர்சியாக நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கோயில் நிர்வாகம் அறிவிந்திருத்த நிலையில், காலை 5 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.