டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.89 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.95 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 3,06,064 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,95,43,328 ஆக உயர்ந்தது.
* புதிதாக 439 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,89,848 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,43,495 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,68,04,145 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,49,335 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 93.07% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.24% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.69% ஆக குறைந்துள்ளது.
*இந்தியாவில் 1,62,26,07,516 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 27,56,364 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.