டமாஸ்கஸ் : சிரியாவில் குர்து இன போராளிகள்- ஐஎஸ் தீவிரவாதிகள் இடையேயான பயங்கர மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. சிரியாவின் வடகிழக்கில் குர்து இன போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஐஎஸ் இயக்கத்தின் கரம் ஓங்கி வருகிறது. இந்த நிலையில் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஹஸாகா நகரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உட்பட 3500 பேர் அடைத்து வைக்கப்பட்ட சிறை ஒன்றின் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.