சித்தூர் : ஆந்திர மாநிலம் நெல்லூரில் செம்மரம் வெட்டி லாரியில் கடத்த முயன்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் உட்பட 58 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நெல்லூர் மாவட்டம் சின்னக்கூறு மண்டலம் புத்தானம் அருகே சென்னை - நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வந்த லாரி மற்றும் காரை நிறுத்த முயன்ற போது, கடத்தல்காரர்கள் போலீசார் மீது லாரியை ஏற்றி தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. சுதாரித்த போலீசார் லாரியை சுற்றி வளைத்த போது, லாரியில் இருந்த கூலி தொழிலாளர்கள் போலீசார் மீது கோடாரிகளை வீசியதாக கூறப்படுகிறது.