பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் நெசவு கூடங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வேலை செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலி எழுப்பும் சங்கு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல வருடங்களுக்கு முன் சங்கு பழுதானதால் பயன்பாடின்றி இருந்தது. இந்நிலையில், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணை தலைவர், வார்டு உறுப்பினர்களின் பெரும் முயற்சியால் மீண்டும் சங்கு சீர்செய்யப்பட்டு நேற்று துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.