ஓஸ்லோ: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளிக்கவில்லை. மனித உரிமை மீறல்களும் அதிகளவில் நடப்பதால், சர்வதேச அளவிலான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. வறட்சி, பஞ்சம் ஏற்பட்டு மக்கள் மோசமான வாழ்க்கை சூழலை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக நார்வேயின் உதவியை தலிபான்கள் நாடியுள்ளனர்.