புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யக்கூடாது என்று, நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை அவர் தள்ளுபடி செய்தார். மேலும், வெறும் விளம்பரத்துக்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூஹி சாவ்லா மேல்முறையீடு செய்தார்.