சென்னை: சென்னை கோவூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (43), அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக, தண்டையார்பேட்டையில் இருந்து மாநகர பேருந்தில் ஏறி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் வைத்திருந்த மணிபர்சை எடுக்க முயன்றபோது, அது காணாமல் போயிருப்பது தெரிந்தது. அந்த பர்சில் அவரது ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய குறியீட்டு எண், பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது.