சென்னை: குன்றத்தூர் துரைசாமி முதலி தெருவை சேர்ந்தவர் சிவா(40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு வைஷ்ணவி(13) என்ற மகளும், நவீன்(8) என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி, கோவூரில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்துவந்தாள். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.