சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 30,580 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 40 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்றாவது நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கிய நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு குறைந்து வருகிறது. அதன்படி 19ம் தேதி 7,298 பேருக்கும், 20ம் தேதி 7,520 பேருக்கும், 21ம் தேதி 7,038 பேருக்கும், நேற்று முன் தினம் 6,452 பேருக்கும், நேற்று 6,383 பேருக்கும் என நான்காவது நாளாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல் நேற்று முன் தினம் தமிழகத்தில் 30,744 என தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 30,580 ஆக குறைந்துள்ளது.