கேப் டவுன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்ற இந்தியா, அந்த தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. பார்ல் நகரில் நடந்த முதல் ஆட்டத்தில் 31 ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. தென் ஆப்ரிக்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது.