திருவள்ளூர்: 200 முதலீடு செய்தால் 400 தருவதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் 9.5 லட்சம் மோசடி செய்த திருவண்ணாமலை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் கோகுல்(25). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், ஒன்னுபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(33) என்பவருடன் டெலிகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தின் மூலம் சரவணன் தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் 200 முதலீடு செய்தால் 400 தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்ற ஆசையில் கோகுல் முதலில் கடந்த 5ம் தேதி சரவணன் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு முதலில் 200 அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய சிறிது நேரத்தில் மீண்டும் 200க்கு பதிலாக 400 கோகுலின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கோகுல் மேலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் 1000 முதல் 10 ஆயிரம் வரை செலுத்த தொடங்கினார்.