ஸ்ரீபெரும்புதூர்: பிரபல ரவுடி படப்பை குணா, ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை, வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குணா (எ) குணசேகரன் (43). பிரபல ரவுடி. மீது சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல காவல் நிலையங்களில் நிலம் அபகரிப்பு, கொலை, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த ஏடிஎஸ்பியாக வெள்ளைதுரை நியமிக்கப்பட்டார். அவரது உத்தரவின்பேரில், ரவுடிகளின் பட்டியல் தயார் செய்து, தனிப்படை அமைத்து ரவுடிகளை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர். இதையொட்டி, பிரபல ரவுடி படப்பை குணா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவானார்.