தமிழகத்தில் 2.93 கோடியில் 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.2021-22ம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மை துறையின் மானிய கோரிக்கையில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விழிப்புப்பணி  மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவ்தாஸ்  மீனா,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குநர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: