சென்னை: இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் பயணிகளின் ரயில் டிக்கெட்டின் நகலை தங்களது செல்போனில் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
காவல்துறை வெளியிட்ட அறிக்கை: வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக முழு ஊரடங்கு நாளான இன்று ரயில், பஸ் நிலையங்களில் ஆட்டோ மற்றும் கால்டாக்சிகள் இயங்க அரசு அனுமதித்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் தலைமையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, டாக்சி சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.