இ-சேவை மையம் துவங்க 36 நபர்களுக்கு ஆணை: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

சென்னை: 36 நபர்களுக்கு இ-சேவை மையங்கள் துவங்குவதற்கான ஆணைகளை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.சென்னை தலைமை செயலகத்தில், நேற்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் தனியார் பிரவுசிங் செண்டர்கள் மூலம் இ-சேவை மையங்கள் துவங்குவதற்கான ஆணைகளை 36 நபர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பவியல் துறை செயலாளர் நீரஜ் மித்தல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டர்.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 2,457 இ-சேவை மையங்கள் வாயிலாக பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்படும் புதிய இ-சேவை மையங்கள் அரசின் சேவைகளைப் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் பெறும் பயனளிக்கும்.

Related Stories: