சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:‘அனைவருக்கும் வீட்டுவசதி’ என்ற குறிக்கோளை எய்தும் வகையில் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்காக பல்வேறு திட்டங்கள் வாயிலாக, லட்சக்கணக்கான மக்கள் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கிய பெருமைக்குரியது.