நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே இறச்சக்குளத்தை சேர்ந்தவர் ராணி (47). குமரி கிழக்கு மாவட்ட அமமுக இளம்பெண்கள் பாசறை செயலாளர். இவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில்அளித்த புகார் மனுவில், அமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராகவன், மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு வாங்கி தருவதாக கூறி ரூ.3.50 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது ஆபாசமாக, அவதூறாக பேசியதாக கூறி இருந்தார்.