சென்னை: தமிழகத்தில் 30 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநிலம் முழுவதும் இதுவரை 6,04,45,762 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,55,648 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 31,03,410ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 37,178ஆக அதிகரித்துள்ளது.