லக்னோ: உத்திரப்பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. இந்தநிலையில் சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.எம்.பி.,யாக உள்ள அவர், தன் அசம்கர் லோக்சபா தொகுதி மக்களின் விருப்பத்தைக் கேட்டு முடிவு செய்வதாக கூறியிருந்தார். இந்தநிலையில் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக, மூத்த தலைவர் அசுதோஷ் வர்மா நேற்று கூறினார்.