வியாபாரியை கடத்த முயன்ற அதிமுக மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் உட்பட 8 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வியாபாரியை கடத்த முயன்ற அதிமுக மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் தென்னம்பாளையம் வேலன்நகரை சேர்ந்தவர் பாபு வாகனம் சீட் கவர் வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் இடம் வாங்குவது தொடர்பாக அதிமுக மாவட்ட மகளிரணி துணைச்செயலாளரான திருப்பூரை சேர்ந்த செல்வியுடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்வியின் தூண்டுதலின் பேரில் 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 19-ம் தேதி பாபுவின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியை காட்டி கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

பாபுவின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வரவே கடத்தலில் ஈடுபட முயன்ற 7 பேரும் காரில் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து பாபு அளித்த புகாரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று இரவு கடத்தல் முயற்சி வழக்கில் தொடர்புடைய அதிமுக மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் செல்வி மற்றும் கடத்தலில் ஈடுபட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் சந்திரபோஸ், ரவிக்குமார், கோபிநாத் ஆகிய 3 பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: