மூணாறு : மூணாறு இரவிகுளம் தேசியப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினரின் மார்க்கெட் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில், 10 வகையான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளது. இங்கு இடமலைக்குடி, லக்கம்குடி, ராஜமலை, மறையூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் சாகுபடி செய்யும் இயற்கை காய்கறி, செறு தேன், காட்டு நெல்லிக்காய், தேன், யூக்காலி மற்றும் புல் தைலம் உள்ளிட்ட 10 வகையான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.