சென்னை: தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் ஆணையர் ரவியின் உத்தரவு பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவல்துறையினர் பழைய மகாபலிபுரம் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது ஸ்விகி ஊழியர் போல டி-சர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் உள்ள உணவு பையிலிருந்து ஏதோ ஒரு பொருளை அங்கு நின்றிருந்த சில நபர்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தான். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவனை பிடித்து விசாரித்தபோது, அந்த நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்குமார் சேனாபதி என்பதும், ஸ்விகி உணவுப் பையில் கஞ்சாவை மறைத்து வைத்து ஐ.டி.ஊழியர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் அவன் விற்பனை செய்தது தெரியவந்தது.