சத்தியமங்கலத்தில் ரூ.2.82 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2510 வாழைத்தார்கள் 2.82 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நேற்று நடைபெற்றது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பவானிசாகர், சிக்கரசம்பாளையம், கே.என்.பாளையம், புன்செய்புளியம்பட்டி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2510 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில் கதளி ரகம் ஒரு கிலோ ரூ.20 முதல் 33 ரூபாய் வரை, நேந்திரன் 15 முதல் 28 ரூபாய் வரையும் விற்றது. பூவன் தார் ரூ.300க்கும், ரஸ்தாளி ரூ.400 வரை, தேன்வாழை 500, செவ்வாழை 450, ரொபஸ்டா 300, பச்சை நாடன் 300 வரையும் மொந்தன் 250 ரூபாய் வரையும் விலை போனது. மொத்தம் 2510 வாழைத்தார்கள் 2.82 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாழை, தேன் வாழை, மொந்தன் வாழைத் தார்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்பனை ஆகாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: