மதுரை: தஞ்சையில் தற்கொலை செய்த மாணவி உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் தொல்லை புகார் வைக்காததால் மறுஉடற்கூறாய்வு தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மாணவியின் தந்தை, தாய் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் நாளை ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் மாணவி தெரிவித்ததை பற்றியும், அவரது இறப்பு குறித்தும் பெற்றோர் வாக்குமூலம் அளிக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க கோரிய வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.