சேலம்: உலகளவில் பஞ்சு சந்தைகளில் பஞ்சு விலை உயர்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டதன் விளைவாக பஞ்சு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிகளவு பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேலம், கள்ளகுறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகளவு பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர்தரம் மற்றும் அதிகளவு நூல் எடைகள் உள்ளதன் காரணமாக இப்பகுதியில் பருத்தி வியாபாரிகள் அதிகளவு பருத்தி கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பருத்தி செடிகள் சேதமடைந்து, உற்பத்தி பாதித்து ஒரு ஏக்கருக்கு 10 குவிண்டால் வரக்கூடிய பருத்தி 3 குவிண்டால் மட்டுமே வருகிறது.