டெல்லி: கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. கூடுதல் டோஸ் தடுப்பூசி தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியிருக்கிறது. 2வது தடுப்பூசி போட்டவர்களுக்கு 9 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.