×

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில் அதிகமாக இறக்கும் நிலை உள்ளது!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில் அதிகமாக இறக்கும் நிலை உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 94.19 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 74.11 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். 21 மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதாகவும் அமைச்சர் கூறினார். 1,71,616 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 65 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இன்று பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,Minister ,Subramanian , Corona Vaccine, 3rd Wave, Minister Ma. Subramanian
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...