×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேருக்கு கொரோனா, 488 பேர் பலி, தற்போது சிகிச்சையில் 21 லட்சம் பேர்: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,89,03,731ஆக உயர்ந்துள்ளது . உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.88 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 3,37,704 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,89,03,731ஆக உயர்ந்தது.

* புதிதாக 488 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,88,884 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,42,676 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,63,01,482 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,13,365 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,050ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* குணமடைந்தோர் விகிதம் 93.50% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.27% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.23% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,61,16,60,078 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 67,49,746 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India ,Corona ,Health Department , corona
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...