காஞ்சிபுரம்: சென்னை தாம்பரம், மோதிலால் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). தனியார் கம்பெனி ஊழியர். இவரது உறவினர் தாம்பரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த அருளரசன் (27).நேற்று முன்தினம் சதீஷ்குமார், அருளரசனுடன், வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். காஞ்சிபுரம் அடுத்த சின்னையன்சத்திரம் பகுதியில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி, பைக்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.