ஆவடி: கொரட்டூர் மாதனாங்குப்பம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரண்(22).இவரது வீட்டில் அருகில் வசிக்கும் நண்பர் பிரபு(25). இவர் பெருமாள்பட்டு மல்லிகை நகரை சேர்ந்த சோபியா(22) என்பவருடன் செல்போனில் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதுகுறித்து சோபியா தனது கணவர் ஜெய்பிரகாஷூடம் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு சோபியா, ஜெயபிரகாஷ் மற்றும் இருவருடன் பிரபு வீட்டுக்கு வந்து அவரை கண்டித்தனர். அப்போது, அவர்களை பிரபுவின் நண்பர்கள் சரண், பிரவீன், ரஞ்சித் ஆகியோர் தட்டி கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, சோபியா தலைமையில் வந்த கும்பல் கத்தியை எடுத்து சரணை சரமாரியாக குத்தியது.