சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டணமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(46). இவரது தம்பி சுரேஷ்(37). இருவரும் கட்டிட தொழிலாளிகள். தாய் தனலட்சுமியுடன் வசித்து வந்தனர். சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். சுரேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், அேத பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துக்க நிகழ்ச்சியில் சுப்பிரமணி, சுரேசுடன் சென்றார். அங்கு இரவு வீட்டில் ஒன்றாக அமர்ந்து இருவரும் மது அருந்தினர். அப்போது, போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் மரம் வெட்ட பயன்படுத்தும் கோடாரியால் சுரேஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.