சிவகங்கை: மானாமதுரை அருகே திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கணவன் வீட்டார் அடித்து கொன்றதாக கூறி பெண் வீட்டார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த குவளைவேலி கிராமத்தை சேர்ந்த கண்ணன். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 27 வயதான கோமதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு கண்ணன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது இருந்தே கணவன், மனைவி இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோமதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.