மதுரை: வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று லேசான நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்றிரவு செய்யப்பட்ட பரிசோதனையில் இன்று அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.