சென்னை: இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் பணிக்கு ஒன்றிய அரசு அழைக்கலாம் என ஒன்றிய அரசு கொண்டு வர உள்ள திருத்தத்துக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.