டெல்லி : டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி அணையா தீபம் 50 ஆண்டுகளுக்குப் பின் அணைக்கப்பட்ட உள்ளது. 1971ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக 1972ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போர் வீரர் நினைவிடத்தில் அணையா சுடர் ஏற்றப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வரும் சுடர் இன்று மாலை அணைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் டெல்லி அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா சுடருடன் ஒன்றிணைக்கப்பட உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.